எல்லோரும் மண்ணின் மைந்தர்கள் என்பது பொது
ஆயினும் மகனே,
நீ ஏன் மழையின் மைந்தன் என தெரியுமா?
மண், நிலத்துக்கு நிலம், இடத்துக்கு இடம்
மனிதனை போலவே மாறுபட்டு இருக்கும்
செம்மை, கருமை, வெண்மை
வண்டல், கரிசல், களி என
மண்ணுக்கு நிறமும் இனமும் உண்டு.
ஆனால், எங்கேயும் எப்பொதும்
மழை மழையாகவே பார்க்கப்படுகிறது
மழை நிறம் பார்க்காது இனம் பார்க்காது,
எவ்வித பேதமும் பார்க்காது
செல்லும் இடம் எல்லாம் செழிக்கச்செய்யும்
குணம் மழைக்கு மட்டுமே உண்டு..
அதுபோலவே மகனே,
நீ செல்லும் இடம் எல்லாம் மாரிபோல்
பேதமில்லா அன்பை பொழியவே உனை
மழையின் மைந்தன் என விளித்தேன் நான் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக